தேடுங்கள்.....

Thursday, November 21, 2013

ஜோக்ஸ் - 11

நயாகரா நீர்வீழ்ச்சி அருகே சுற்றுலா பயணிகளிடம்..ஒரு வழிகாட்டி சொல்கிறார்...

"
இதுவே உலகின் மிகப்பெரிய அருவி.. இதன் ஓசை அளவிட முடியாதது.. ஒரே நேரத்தில் 20 அதிவேக விமானங்கள் எழுப்பும் ஒலியைவிட அதிகமானது.. அம்மணிகளே.. சற்று அமைதியாக இருங்கள்.. அருவியின் ஓசையை நன்கு கேட்கலாம்...!!!"

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
தலைவர் வீட்டு சோதனையிலே கிடைச்ச 2000 செருப்புகளுக்கு என்ன சமாதானம் சொல்லி சமாளிச்சாரு..?

காசு குடுத்து வாங்கியிருந்தா கணக்கு காட்டலாம்.. மேடையிலே வந்து விழுந்ததுக்கெல்லாம் எப்படி கணக்கு காட்டுறதுன்னு சொல்லிட்டாரு..

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
இன்ஸ்பெக்டர்.. என்னை உடனே லாக்-அப் -ல் வையுங்க..

ஏன்.. என்ன ஆச்சு..?

என் மனைவியை கட்டையால் தலையில் அடித்துவிட்டேன்..

செத்துட்டாங்களா..?

இல்லே.. கோபமா வந்துட்டு இருக்கா.. அதனாலதான் சொல்றேன்.. ப்ளீஸ்.. உடனே உள்ள வச்சு பூட்டுங்க..!!

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
டைரக்டர் : ( நடிகையிடம் காட்சியை விவரிக்கிறார்)..மேடம்..உங்கள வில்லன் கெடுக்க வர்றான்..நீங்க அவன்கிட்டே சிக்காம தப்பிச்சு ஒடறீங்க..

நடிகை : சார்..ரெண்டு நாளா கால்லே சுளுக்கு..என்னாலே ஓட முடியாது..பேசாம வில்லன் ஆசைக்கு இணங்கிடுறேனே..!
டைரக்டர் : ??????????????????????????????????

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
ராமு : டேய் சோமு.. எங்கப்பா பயங்கரமா மேஜிக் செய்வாரு..என் பையிலே 1 ரூவா காயினைப் போட்டு உன் பையிலேருந்து எடுப்பாரு..!

சோமு : ப்ப்பூ.. இது என்னடா பிரமாதம்..? எங்கப்பா ராத்திரி படுக்கறப்போ என் ரூம்லே என்னோட படுப்பார்.. காலையிலே எங்கம்மா ரூம்லேருந்து எழுந்து வருவார்..தெரியுமா?

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் இறந்து சொர்க்கத்திற்கு சென்றனர். ஒவ்வொருவரையும் கடவுள் தனியே சந்தித்து, அவர்களது குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து கேட்டார். குறைவான குழந்தை உடையவர்களுக்கு அதிகமான பரிசும், அதிகமான குழந்தை பெற்றவர்களுக்கு குறைவான பரிசும் கொடுத்தார். காந்தியும் கடவுளை சந்திக்க உள்ளே சென்றார். ஆனால் வெளியே வரும்போது வெறுங்கையுடன் வந்தார். என்னவென்று மற்றவர்கள் விசாரித்தபோது காந்தி கோபமுடன் சொன்னார்.

யாரோ ஒரு முட்டாள் கடவுளிடம் 'நான் தான் இந்தியாவின் தந்தை' என்று சொல்லியிருக்கிறான்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
"பேண்ட் கிழிஞ்சிருக்கு கவனிகாமே
பேட்ஸ்மேன்ஆடிக்கிட்டிருக்காரே

தெரிஞ்சுதான் ஆடிக்கிட்டுருக்கார்
ஜட்டி விளம்பரத்துக்கு பணம் வாங்கியிருக்காரு!

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
இரண்டு காதலர்கள் தற்கொலை செய்ய முடிவெடுத்து மலை உச்சிக்குச் சென்றனர். இருவரும் கண்ணை மூடிக்கொண்டு குதிக்கத் தயாராகினர். காதலன் முதலில் குதிக்க, காதலி 'காதலுக்குக் கண்ணில்லை என்பதை உணர்ந்துவிட்டேன்' என்று கூறிக்கொண்டு பின்வாங்கி விட்டாள்.

பாதாளத்திற்குப் போய்க்கொண்டிருந்த காதலன், 'தெரியும்டீ உங்களப்பத்தி' என்று கூறிக்கொண்டு முதுகில் மறைத்து வைத்திருந்த பாராசூட்டை விரித்துக்கொண்டு பறந்தான்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
நள்ளிரவில் அந்த நகரத்திற்கு வந்த ஒருவன் தங்குவதற்கு அறை தேடி அலைந்தான். எங்கும் கிடைக்கவில்லை. ஒரு விடுதியிலிருந்து அவன் ஏமாற்றத்துடன் திரும்பும்போது அங்கிருந்த பொறுப்பாளர்.

இரவு உங்களுக்காக இரு படுக்கைகள் கொண்ட அறை. அதில் ஒரு படுக்கையில் பெண்மணி ஒருத்தி தூங்கிக் கொண்டிருக்கிறாள். அவளை எக்காரணம் கொண்டும் எழுப்ப மாட்டேன் என்றால் இன்னொரு படுக்கையில் நீங்கள் இன்றிரவு அமைதியாகத் தூங்கலாம் என்றார்.

அவனும் அந்த அறையில் தங்க ஒப்புக் கொண்டான்.

20
நிமிடம் கழித்துக் கீழே ஒடி வந்தான் அவன்.

சார்இ அந்தப் படுக்கையில் படுத்திருந்த பெண் இறந்து கிடக்கிறாள் என்று அலறினான் அவன்.

நான்தான் உங்களுக்கு முன்னமேயே சொன்னேனே நீங்கள் அந்த
படுக்கையில் இருக்கும் பெண்மணியை தொந்தரவு செய்யாத வரையில்
நிம்மதியாக தூங்கலாம் என்றார் பொறுப்பாளர்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
என்ன சார் இது..? இந்த பத்திரிக்கை விலை இப்படி ஏறிக்கிட்டே போகுதே..?

நீங்கதான் எதுவும் வாங்கறது இல்லையே..? அப்புறம் ஏன் கவலைப்படறீங்க..?

அடுத்த வீட்டுக்காரன் ஒரு கஞ்சப் பயல்.. பொசுக்குன்னு எல்லா பத்திரிகையையும் நிறுத்தினாலும் நிறுத்திப்புடுவான்

1 comment:

  1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete

என்ன சொல்லப் போகின்றீர்கள் ?........................